Donnerstag, 14. August 2008

உனது ஓசையால்ஒருமுறையாவது
இன்பம் சேர்த்துவிடு.

------------
இதன் ராகம் தோஸ்
http://www.musicindiaonline.com/p/x/pUm2RHz8IS.As1NMvHdW/


துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா?
எமக்கின்பம் சேர்க்கமாட் டாயா?
நல்அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா?
கண்ணேஅல்லல் நீக்கமாட் டாயா?

துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க --
எம்வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? --
கண்ணேஆடிக் காட்டமாட் டாயா?

துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது --
யாம்அறிகி லாத போது --
தமிழ்இறைவ னாரின் திருக்குறளிலே
ஒருசொல்இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா?

துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் --
தமிழ்ப்புலவர் கண்ட நூலின் --
நல்திறமை காட்டி உனை ஈன்ற
எம் உயிர்ச்செல்வம் ஆகமாட் டாயா? --
தமிழ்ச்செல்வம் ஆகமாட் டாயா?
துன்பம்

Keine Kommentare: